Skip to main content

பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார்

 

 




பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார்

(1774-1864)


திருநெல்வேலி மாவட்டத்தில், ஐயம்பெருமாள் பிள்ளையின் என்பவருக்கு மகனாக 1735ம் ஆண்டு பிறந்தார் அருணாச்சலம். பக்தி முறைப்படி வளர்க்கப்பட்ட இவர், ஆறுகள், நதிகள், குளங்கள் என சுமார் ஆயிரம் இடங்களில் புனித நீராடும்படி பல யாத்திரை மேற்கொண்டபோது, நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். பணத்தை வட்டிக்குக் கொடுப்பவராக இருந்த இவர், ஏழைகளுக்கும் உதவி செய்யும் உள்ளமுடையவர். கத்தோலிக்க மத போதகர் ஒருவரைச் சந்தித்ததினால் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார்ளூ 1760ம் ஆண்டு தனது 25-வது வயதில் தேவசகாயம் என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றார். லத்தீன் மற்றும் இறையியலைக் கற்றிருந்தபோதிலும், ஆயராகவோ இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுளூ என்றபோதிலும், உபதேசியாராக ஆலயத்தில் பணிசெய்துவந்தார். இதனிமித்தம் குடும்பத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார். 1735ம் ஆண்டு தனது 35வது வயதில் சவரிராயன் செட்டியார் என்பவரது மகளும் கத்தோலிக்க விசுவாசியுமான ஞானப்பூவை வாழ்க்கைத் துணையாகத் தெரிந்துகொண்டார். இத்தம்பதியருக்கு முதல் மகனாக செப்டம்பர் 7, 1774 அன்று பிறந்தார் வேதபோதகம். பின்னர் இவரது பெயர் வேதநாயகம் என்று அழைக்கப்பட்டது. 

ஏழு வயதில் தாயை இழந்தார் வேதநாயகம்; உடன் பிறந்த சூசையம்மாள் மற்றும் பக்கியம்மாள் ஆகிய இரு சகோதரிகளும் தாயின் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டனர். தனது ஐந்தாவது வயதிலேயே இலக்கணத்தைக் கற்கத் தொடங்கினபோதிலும், தாயின் இறப்பிற்குப் பின் கல்வியில் கரிசனையற்றவராகக் காணப்பட்டார். பிற மேய்ப்பர்களுடன் மாடுகளை மேய்க்கும் நிலைக்கும் ஆளானார். 1783-ம் ஆண்டு கல்வி கற்கும்படியாக ஆசான் ஒருவரிடம் அனுப்பப்பட்டார். இந்த நேரத்தில், தந்தை தேவசகாயம் அதே குடும்பத்தைச் சேர்ந்த மரியமுத்துவை திருமணம் செய்துகொண்டார். ஞானபரம் மற்றும் பாக்கியமுத்து என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர். உபதேசியாராக இருந்தபோது உண்டான மகக்கசப்புகள் நிமித்தம் தேவசகாயம் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கிளாரிந்தாவையும், ஊழியர் Colonel Beaton அவர்களையும் சந்தித்து, இயேசுவின் இரட்சிப்பின் செய்தியை அறிந்தகொண்டார் தேவசகாயம். 1785ம் ஆண்டு, தஞ்சையிலிருந்த Rev. Chritian Fredric Swatz அவர்களைச் சந்திக்க தேவசகாயத்தை அழைத்துச் சென்றார் ஊழியர் Colonel Beaton. 

1785 ம் ஆண்டு திருநெல்வேலிக்கு வருகை தந்த ஜெர்மானிய மிஷனரி சுநஎ. ஊ.கு.ளுஉhறயசவண உடன் 12 வயதாயிருந்த மகன் வேதநாயகத்தை தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தார் தேவசகாயம். Rev. C.T. Swatz என்பவரிடம் இளவரசர் சரபோஜி கல்வி கற்றுக்கொண்டிருந்த நாட்களில், அவருடன் இணைந்து வேதநாயகமும் கல்வி பயின்றார். தொடர்ந்து, தற்போது திருவாங்கூர் என்றழைக்கப்படும் தரங்கம்பாடியிலுள்ள லுத்தரன் செமினரியில் இறையியல் பயின்றார். கல்வியினை நிறைவு செய்து, திருவாங்கூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மிஷனரி பள்ளியில் 19-வது வயது முதல் ஆசிரியராகப் பணியாற்றினார் வேதநாயகம். கிறிஸ்தவப் பாடல்களையும், புத்தகங்களையும் எழுதத்தொடங்கினார். அவருடைய படைப்புகளில் அருமையானது 'பெத்தலகேம் குறவஞ்சி' என்ற புத்தகம். 'தந்தானைத் துதிப்போமே' 'ஆமென் அல்லேலூயா' 'இயேசுவையே துதி செய்' போன்ற பாடல்கள் இவர் இயற்றியவைகளுள் சில. சக மாணவனான சரபோஜி அரசனாக அரியணை ஏறியபோது, அவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார் வேதநாயகம். 'ஞானதீப கவிராயர்' 'வேத சாஸ்திரிகள்' 'சுவிசேஷ கவிராயர்' என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டார். இவரது பாடல்கள் சைவபக்தர்களைச் சார்ந்த தேவாரம் மற்றும் திருப்புகழ் நடையைச் சார்ந்தவை. 'ஜெபமாலை' என்ற படைப்பு தாயுமானவரின் நடையில் அமைந்தது. கிறிஸ்துவின் சுவிNசுஷத்தை அறிவிப்பதை தொடர்ந்து தன் முதற்பணியாகச் செய்துவந்தார். அரசன் சரபோஜி வேதநாயகத்தை தனது மூத்த சகோதரனாகவே பாவித்துவந்தார். 

இவர் இயற்றிய சுமார் 500 பாடல்களும், எழுதிய 133 புத்தகங்களும் கிறிஸ்தவத்திற்குக் கிடைத்த காலத்தால் அழியாச் சொத்துக்களே. இவரது பாடல்கள் இடம்பெறாத ஆராதனையே இல்லையெனும் அளவிற்கு இறைவனை ஆராதிக்க கவிகளை எழுதி கையில் கொடுத்தவர். இவரது தலைமுறையினர் ஊழியர்களாக தங்களை அர்ப்பணித்து சாஸ்திரியார் என்ற பெயருடன் திருப்பணியை இன்றுவரை தொடர்ந்து நிறைவேற்றிவருகின்றனர். தொன்றுதொட்டு இன்றும் தொடருகிறது இவரது சந்தததியின் திருப்பணி.

Comments

Popular posts from this blog

இஸ்ரவேல் தேவதாஸ்

இஸ்ரவேல் தேவதாஸ்                தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து சுவிசேஷப் பணிக்கு வட இந்தியா புறப்பட்ட வாலிபர்கள் பலர் , 1970  முதல்  80  வரை தேவனுடைய இறுதிக் கட்டளைக்கு அடிபணிந்து நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வழியாக கலாச்சாரம் கடந்து சென்று வட இந்தியாவில் பணியாற்ற புறப்பட்ட செயல் வீரர்களில் ஒருவர் தான் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ்.  இவர் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள மணக்காடு என்ற கிராமத்தில்  1949- ஆம் ஆண்டு மே மாதம்  7- ஆம் தேதி பிறந்தார்.  இவருடைய தந்தை திரு. பாக்கிநாதன் ,  தாய் திருமதி. மரிய முத்து ஆவர்.  இவருடைய பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர்.  நல்ல கிறிஸ்தவ பக்தியில் சிறந்து விளங்கினார்கள்.  இந்த குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு  8  பிள்ளைகளைக் கொடுத்தார்.   5  ஆண் பிள்ளைகளும் , 3  பெண் பிள்ளைகளுமாக ,  தேவனுக்கு பயந்து அவருடைய நாம மகிமைக்காக வாழ்ந்து வந்தனர்.           இஸ்ரவேல் தேவதாஸ் ,  அவர்களது குடும்பத்தில்  2- வது மகன்.  இவருக்கு ஒரு அண்ணன் இருந்தார்.  அவருடைய பெயர் சாமுவேல் செல்லத்துரையாகும்.   3- வது மகன் சாலமோன் , 4- வது மகன் கிறிஸ்டோபர் தாமஸ் , 5- வது சகோதரி செல்

ஐ. ஜே. ஐயாத்துரை (1890 - 1973)

  இந்திய_மிஷனெரி_சங்கம் அனுப்பிய முன்னோடி மிஷனெரிகளில் ஒருவரே  ஐ.ஜே. ஐயாத்துரை.  ஐசக் இயேசுவடியான் ஐயாத்துரை என்ற முழுப் பெயர் கொண்ட இவர், 1890ஆம் ஆண்டு பிறந்தார். ஆசிரியராக தன் பணியைத் துவக்கிய இவர், நற்செய்திப் பணியில் வாஞ்சை கொண்டதின் காரணமாக, ஆசிரியர் பணியைத் துறந்து, பேராயர் வி.எஸ். அசரியாவோடு மிஷனெரியாக 1912ஆம் ஆண்டு, ஜட்சர்லா என்ற இடத்திற்கு மிஷனெரியாக பயணம் செய்தார். ஊழிய வாஞ்சையின் மிகுதியால் கிராமங்களிலேயே தங்கிவிடும் இவர், தங்குவதற்குக் கூட வீடு கிடைக்காத நிலையில் மொட்டை மாட்டு வண்டியின் அடியில் தங்கி, பல இன்னல்களையும். இடையூறுகளையும் கடந்து, மக்களுக்குத் தொண்டாற்றினார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இரட்சண்ய_யாத்திரிகம் என்ற ஒற்றைத்தாள் பிரதியை அச்சிட்டு தான் செல்லுமிடமெங்கும் விநியோகித்து வந்தார். மனந்திரும்பிய மைந்தன், இயேசுவின்_பிறப்பு, உயிர்த்தெழுதல், மோட்ச பிரயாணம் போன்ற நிகழ்ச்சிகளை நிழற்படம் மூலம் மக்களுக்குக் காண்பித்து, அவர்களை கிறிஸ்துவின் பாதையில் நடக்கச் செய்தார்.  "ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா"  என்ற மிகச்சிறந்த பாடலை எழுதி, அதற்கு இசையும

சகோதரர் எமில் ஜெபசிங்

    நம்மை முளையாக்கவும், இலையாக்கவும் விதையானவர்களுள் சகோ. எமில் ஜெபசிங் அவர்களது வாழ்க்கையும் அடங்கும். ஜனவரி 10, 1940 அன்று மறைதிரு லு.ஊ. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த இவர், தனது வாலிப நாட்களிலே, சகோ. P. சாம் மற்றும் சகோ. N. ஜீவானந்தம் போன்ற ஊழியர்களின் வழிநடத்துதலால், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில் தனது 17-வது வயதில் ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தார். ஏமி. கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற தேவ ஊழியர்கள் கால் தடம் பதித்த பண்ணைவிளையிலே இவருக்கும் மிஷனரி தரிசனம் பிறந்தது.  சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பணியை இராஜினாமா செய்துவிட்டு ஊழியத்திற்குப் புறப்பட்டார். நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை நிறுவியவர்களுள் ஒருவராகவும், Trans World Radio (TWR) -வின் இயக்குநராகவும் செயல்பட்டார். மே 1, 1980 -ம் ஆண்டு சகோதரர் சிலருடன் இணைந்து விஷ்வவாணி ஊழியத்தைத் தொடங்கினார்; இவ்வூழியத்தினால், சந்திக்கப்படாத கிராமங்களில் சத்தியம் ஒலித்தது, கிராமங்களில் ஆலயங்கள் உருவாகின. அநேக வாலிபர்க