முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஸ்ரவேல் தேவதாஸ்

இஸ்ரவேல் தேவதாஸ்


           தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து சுவிசேஷப் பணிக்கு வட இந்தியா புறப்பட்ட வாலிபர்கள் பலர், 1970 முதல் 80 வரை தேவனுடைய இறுதிக் கட்டளைக்கு அடிபணிந்து நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வழியாக கலாச்சாரம் கடந்து சென்று வட இந்தியாவில் பணியாற்ற புறப்பட்ட செயல் வீரர்களில் ஒருவர் தான் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ்.  இவர் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள மணக்காடு என்ற கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி பிறந்தார்.  இவருடைய தந்தை திரு. பாக்கிநாதன்தாய் திருமதி. மரிய முத்து ஆவர்.  இவருடைய பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர்.  நல்ல கிறிஸ்தவ பக்தியில் சிறந்து விளங்கினார்கள்.  இந்த குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு பிள்ளைகளைக் கொடுத்தார்.  ஆண் பிள்ளைகளும், 3 பெண் பிள்ளைகளுமாகதேவனுக்கு பயந்து அவருடைய நாம மகிமைக்காக வாழ்ந்து வந்தனர்.

        இஸ்ரவேல் தேவதாஸ்அவர்களது குடும்பத்தில் 2-வது மகன்.  இவருக்கு ஒரு அண்ணன் இருந்தார்.  அவருடைய பெயர் சாமுவேல் செல்லத்துரையாகும்.  3-வது மகன் சாலமோன், 4-வது மகன் கிறிஸ்டோபர் தாமஸ், 5-வது சகோதரி செல்லக்களி, 6-வது சுகந்தி ஜெயத்தாய், 7-வது பெஞ்சமின் ஐயாத்துரை கடைசி மகளாக பேபி மரகதம் என ஒரு பெரிய குடும்பமாக மணக்காட்டில் வசித்து வந்தனர்.  ஏழைக் குடும்பமாக இருந்தாலும் அனுதினமும் குடும்பமாக ஜெபித்து தேவனையே நம்பி வாழ்ந்து வந்தனர்.

    பெற்றோர் பிள்ளைகளை நல்ல கிறிஸ்தவ நெறிமுறைகளில் வளர்த்தார்கள்.  அவர்களுடைய தாய் ஒரு ஜெபிக்கும் மாதிரியான தாய்.  பிள்ளைகள் ஆண்டவரை அறிந்து அவருக்காக வாழ வேண்டும்.  மட்டுமள்ளாது கிறிஸ்துவின் பணியை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது தாயார் திருமதி. மரிய முத்துவிற்கு இருந்தது.  அதற்காக அவர்கள் ஜெபித்தும் வந்தார்கள்.  அவர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து தியாகத்தோடு வாழ்ந்து அனைவரையும் படிக்க வைத்தார்கள்.

            இஸ்ரவேல் தேவாதாஸ் தன்னுடைய பள்ளி இறுதி வகுப்பை பாளையங்கோட்டை தூய யோவான் உயர்நிலைப் பள்ளியில் முடிக்கும் வரை பெயர் கிறிஸ்தவனாகவே வாழ்ந்து வந்தார்.  மனக்காட்டில் உள்ள சி. எஸ். ஐ திரித்துவ ஆலயத்திற்கு ஞாயிறு ஆராதனை செல்வதுஓய்வு நாள் பாடசாலைவாலிபர் கூடுகை என சென்றாலும் கிறிஸ்துவை தனிப்பட்ட வாழ்வில் அறியவில்லை.  1965-ஆம் ஆண்டு தன்னுடைய எஸ்.எல்.சி-ஐ வெற்றியாக முடித்தார்.

இரட்சிப்பின் அனுபவம்:

            தன் பள்ளிப் படிப்பின் இறுதி நாட்களில் அமெரிக்க மிஷனெரி ஸ்டேன்ஸி ஜோன்ஸ் அவர்கள் கிறிஸ்து தரும் பாவ மன்னிப்பின் நிச்சயம்இரட்சிப்பின் அனுபவம் அனைவருக்கும் அவசியம் என்று பிரசங்கித்ததைக் கேட்ட இஸ்ரவேல் தேவதாஸ் பரிசுத்த ஆவியானவரால் உணரப்பட்டு தன்னுடைய பாவத்தை தேவனிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று கிறிஸ்துவின் பிள்ளையானார். அப்போஸ்தலர் 2: 21-ல் கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.  என்ற வசனத்தின்படி அவர் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொண்டார்.  யோவான் 2: 24 வசனத்தில் சொன்ன வார்த்தையின் படி தேவன் ஆவியாகவே இருக்கிறார்அவரை தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும்உண்மையோடும் அவரை தொழுதுகொள்ள வேண்டும.அனுதினமும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ஆண்டவருடன் நல்ல உரவை ஏற்ப்படுத்தி அவரையே சேவித்து வந்தார்.

ஊழியத்திற்கு தேவனுடைய அழைப்பு:

            அருகில் உள்ள அவர்களது ஆலயத்தில் நடைபெறும் அனைத்து ஊழியங்களிலும் பங்குபெற்று வந்தார்.  வாலிபர் கூடுகை மற்றும் ஆவிக்குரிய கூடுகைகளிலும் உற்சாகமாக பங்குபெற்றார்.  அவருடைய தாயார் அதற்கு தேவையான அனைத்து உற்சாகத்தையும் கொடுத்தார்கள்.  இவ்விதமாக ஆவிக்குரிய வாழ்வில் அந்த வாலிப நாட்களில் வளர நல்ல வாய்ப்பு கிடைத்தது.

            திருச்சபையில் நடைபெற்ற ஒரு ஆவிக்குரிய கூடுகையில் அருள்திரு. ஸ்டீபன் அவர்கள் தேவன் பேதுருவை எவ்விதம் ஊழியத்திற்கு அழைத்தார் என்பதையும்வாழ்வில் வந்த போராட்டங்களில் அவர் எவ்விதமாக வெற்றி பெற்றார் என்பதையும் விவரமாக கற்றுக் கொடுத்தார்.  இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் யோவான் 21: 14  22 வரை உள்ள வேதபகுதியில் ஆண்டவர் சோர்ந்து பின்வாங்கிய பேதுருவை எவ்விதமாக ஊழியத்திற்கு அழைத்தார் என்பதையும்ஆயர் பிரசங்கித்தார்.  ஆண்டவர் பேதுருவிடம் கேட்ட கேள்வி யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயாஎன்றார்.  அதற்கு அவன் ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான்.  அவர் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.  இந்த வசனத்தின் வழியாக தேவன் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ் அவர்களுடன் இடைபட்ட படியால் இருக்கிற இடத்தில் தேவ பணியை செய்ய வேண்டும் என்ற உந்துதலைப் பெற்று தன்னுடைய திருச்சபையில் ஒரு ஓய்வு பாடசாலையை ஆரம்பித்தார்.  தேவன் அழைத்தபடி இந்த ஆடுகளை கிறிஸ்துவுக்குள் நடத்த வேண்டும் என்ற பேராவலோடு தன் சிறுவர் ஊழியத்தை தொடங்கினார்.  அற்ப்பமான ஆரம்பத்தை யார் அசட்டை பண்ணலாம் என்று சகரியா 4: 10-ல் கூறியபடி முதல் முயற்ச்சியிலேயே நாற்பது சிறுவர்சிறுமியர் அந்த ஓய்வுநாள் பாடசாலைக்கு வந்தனர்.

    உலகத்தின் பின் சென்று தங்கள் வாழ்வை கெடுத்துக் கொள்கிற வாலிபர்களையும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்த வேண்டும் என்ற தாகம் சகோதரர் இஸ்ரவேல் தேவதாசுக்கு ஆண்டவர் கொடுத்தார்.  எனவே வாலிபர்களுக்கென ஒரு கூடுகையை மனக்காடு சி.எஸ்.ஐ திருச்சபையில் ஆரம்பித்தார்.  வாரம் ஒரு முறை வாலிபர்களாக கூடி ஜெபித்துவேதத்தை கற்று வந்தனர்.  எஸ்.எல்.சி-வரை படித்திருந்த சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படித்து வந்தார்.  ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.  எனினும் ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து தன்னுடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற வாஞ்சை அவருக்குள் இருந்தது.  தன்னுடைய எதிர்காலமும் நன்றாக அமைய வேண்டும் என ஜெபித்து வந்தார்.  திருநெல்வேலி பேராலயத்தில் அலுவலக பணியாளர் வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.  எனவே வேலையில் சேர்வதற்காக அழைப்பும் வந்தது.

            ஆனால் அவருடைய வாழ்வில் மிகுந்த போராட்டமாக இருந்தது.  வேலைக்கு செல்வதா? அல்லது தேவனுடைய பணியை செய்வதா? என தீர்மானம் செய்ய முடியாமல் ஜெபித்து வந்தார்.  ஆண்டவர் என்னை ஆடுகளை மேய்க்க அழைத்தாரே என்ற காரியம் அவர் மனதில் மறுபடியும் மறுபடியும் தோன்றவே தன்னுடைய தாயாரின் உந்துதலின் பேரில் இந்திய மிஷனெரி சங்கத்தில் மிஷனெரியாக செல்ல தீர்மானித்தார்.  அதற்காக விண்ணப்பத்தை ஐ.எம்.எஸ்-க்கு அனுப்பினார்.  உடனே நேர்முகத் தேர்விற்கும் அழைக்கப்பட்டார்.  ஒடிஷாவிற்கு மிஷனெரியாக செல்ல தன்னை ஆயத்தப்படுத்தினார்.  ஆனால் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை.  எனவே மிகவும் சோர்ந்துபோய் விட்டார்.  இதைக் கேள்வியுற்ற ஆருமுகநேரி தாரங்கதாரா தொழிற்சாலையில் பணியாற்றிய அவருடைய உரவினர் கேள்விப்பட்டு நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் ஊழித்தைப் பற்றி கூறி அதற்கு விண்ணப்பம் அனுப்ப உற்சாகப் படுத்தினார்.  ஆனால் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ் அதற்கு உடன் படாமல் நாட்களை கடத்தி வந்தார்.  இப்படிப்பட்ட நாட்களில் தூத்துக்குடியில் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு நடத்தின மிஷனெரி முகாமிற்கு தன்னுடைய சகோதரருடன் சென்று பங்கு பெற்றார்.  அங்கு மிஷனெரி பணி என்றால் என்ன? அதின் அவசியம் என்ன? ஏன் நாம் மிஷனெரியாக செல்ல வேண்டும் என கற்றுக் கொண்டார்.  மிஷனெரி முகாமின் செய்திகள் உள்ளத்தை ஆழமாக தொட்டன.  எனவே, அங்கே முழுமையாக தன்னை அர்ப்பணித்து மிஷனெரியாக செல்ல முன்வந்தார்.  1974-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் இணைந்தார்.  தன் தாயாரின் கணவான தன் பிள்ளைகள் ஊழியம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சையை தேவன் இவ்விதமாக நிறைவேற்றி வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார்

    பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் (1774-1864) திருநெல்வேலி மாவட்டத்தில், ஐயம்பெருமாள் பிள்ளையின் என்பவருக்கு மகனாக 1735ம் ஆண்டு பிறந்தார் அருணாச்சலம். பக்தி முறைப்படி வளர்க்கப்பட்ட இவர், ஆறுகள், நதிகள், குளங்கள் என சுமார் ஆயிரம் இடங்களில் புனித நீராடும்படி பல யாத்திரை மேற்கொண்டபோது, நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். பணத்தை வட்டிக்குக் கொடுப்பவராக இருந்த இவர், ஏழைகளுக்கும் உதவி செய்யும் உள்ளமுடையவர். கத்தோலிக்க மத போதகர் ஒருவரைச் சந்தித்ததினால் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார்ளூ 1760ம் ஆண்டு தனது 25-வது வயதில் தேவசகாயம் என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றார். லத்தீன் மற்றும் இறையியலைக் கற்றிருந்தபோதிலும், ஆயராகவோ இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுளூ என்றபோதிலும், உபதேசியாராக ஆலயத்தில் பணிசெய்துவந்தார். இதனிமித்தம் குடும்பத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார். 1735ம் ஆண்டு தனது 35வது வயதில் சவரிராயன் செட்டியார் என்பவரது மகளும் கத்தோலிக்க விசுவாசியுமான ஞானப்பூவை வாழ்க்கைத் துணையாகத் தெரிந்துகொண்டார். இத்தம்பதியருக்கு முதல் மகனாக செப்டம்பர் 7, 1774 அன்று பிறந்தார் வேதபோதகம். பின்னர் இவரது பெய...

பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா

  பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் வேலாயுதம் என்ற தாமஸ் வேதநாயகம், 1839-ம் ஆண்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட இவர், தனது மகனுக்கு வேதநாயகம் சாமுவேல் அசரியா எனப் பெயரிட்டார். 17.08.1874 அன்று பிறந்தார் பேராயர் அசரியா, 1889-ம் ஆண்டு தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், தாயின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டவர். நல்லதோர் ஜெப வீரனாகவும், வேதத்தை நன்கு கற்றறிந்த வாலிபனாகவும் வளர்ந்து வந்த இவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இறையியல் பட்டமும் பெற்றார். பின்னர் 'கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் (YMCA) காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். அந்நாட்களில், மிஷனரியாகப் பணிசெய்துகொண்டிருந்த உவாக்கர் ஐயரது ஊழியத்தினாலும், செய்தியினாலும் தேவனுக்காக ஊழியம் செய்ய அதிகமாக ஊக்குவிக்கப்பட்டார். 1902 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்கள் தொடங்கிய மிஷனரி சங்கத்தின்மூலம் நடைபெற்றுவந்த செயல்பாடுகளினால் மிகவும் ஈர்க்கப்பட்டு, இந்தியாவிலும் மிஷனரி சங்கம் ஒன்றைத் தொடங்க முடிவு செய்தார்.  மிஷனரி மாநாடு ஒன்றில் இவர் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, ஜனங்கள் ஆர்வமு...