முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போதகர் ஜீவானந்தம்




    தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள சாலம்பாளையம்  எனும் கிராமத்தில் கிறிஸ்துவை அறியாத ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தார். எட்டுவருட பள்ளிப் படிப்பிற்குப் பின்னர், தந்தையைப் போன்றே ஆசிரியராக விரும்பினார். விழுப்புரம் அருகில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்றில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் 1951-ம் ஆண்டு பணி நியமன ஆணை கிடைத்ததும், சென்னைக்கு இடம்யெர்ந்து ஆசிரியர் பணியினைத் தொடர்ந்தார். திராவிட முன்னேற்ற கட்சியின் மீது இருந்த அதிகமான பற்றினால், கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிர தொண்டனாகப் பணியாற்றிவந்தார். 1957-ம் ஆண்டு லேமென் சுவிசேஷ ஐக்கியத்தின் மூலமாக கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொண்டார்; இரட்சிக்கப்பட்டு புது வாழ்வினைத் தொடங்கினார். இரட்சிக்கப்பட்ட சில நாட்களிலேயே சுவிசேஷகராக கிறிஸ்துவின் நற்செய்தியினைப் பிரசங்கிக்கத் தொடங்கினார். 1960 -ம் ஆண்டு பரிசுத்த ஆவியின் நிறைவினைப் பெற்று, பகுதி நேரமாக ஊழியத்தைத் தொடர்ந்தார். 1968 -ல் தனது ஆசிரியர் பணியினை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேரமும் கர்த்தருக்கென்று ஊழியம் செய்யத் தொடங்கினார். அந்நாட்களில், ACA சபையுடன் நெருக்கமாக இருந்தவராக ஊழியம் செய்துவந்தார். 1975 -ம் ஆண்டு: C.P.D அருமைநாயகம் அவர்களின் முயற்சியில், முதன்முறையாக கடல் கடந்து சென்று, யாழ்ப்பாணம் பகுதிகளில் நற்செய்திக் கூட்டங்களில் பிரசங்கித்தார்.  

    சென்னையில் போதகர் ஜீவானந்தம் அவர்கள் நடத்திவந்த முழு இரவு ஜெபங்கள், சென்னைப் பட்டணத்தல் அநேகரை கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக எழுப்பியது. சகோ. D.G.G தினகரன் அவர்கள் இந்த முழு இரவு ஜெபங்களில் தவறாமல் கலந்துகொள்வது வழக்கம். 1983 முதல் 1990 வரை World Missionary Evangelism, Madras என்ற ஸ்தாபனத்தை நிறுவினார். 1990 -ம் ஆண்டு தேவனுடைய தரிசனத்தைப் பெற்றவராக, 'மகிழ்ச்சி' (Delight Christian Assembly) என்ற திருச்சபையினைத் தொடங்கினார். 'மகிழ்ச்சி' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ஸ்தாபகராகவும் செயல்பட்டுவந்தார். கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட போதகர் ஜீவானந்தம் மூலமாக போதகர் D. மோகன் (NLAG, Chennai) கிறிஸ்துவின் ஊழியத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். திருக்கரத்தால் தாங்கி என்னை' என்ற பாடலை இயற்றிய சகோ. J.V. பீட்டர் அவர்களை தான் செல்லும் இடமெல்லாம் அழைத்துச் சென்று மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவரை கூடவே தங்கவைத்திருந்தார். அநேக தேவமனிதர்களை உருவாக்கிய போதகர் ஜீவானந்தம் 16 அக்டோபர் 2006 அன்று பரம வீட்டில் பிரவேசித்தார்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்ரவேல் தேவதாஸ்

இஸ்ரவேல் தேவதாஸ்                தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து சுவிசேஷப் பணிக்கு வட இந்தியா புறப்பட்ட வாலிபர்கள் பலர் , 1970  முதல்  80  வரை தேவனுடைய இறுதிக் கட்டளைக்கு அடிபணிந்து நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வழியாக கலாச்சாரம் கடந்து சென்று வட இந்தியாவில் பணியாற்ற புறப்பட்ட செயல் வீரர்களில் ஒருவர் தான் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ்.  இவர் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள மணக்காடு என்ற கிராமத்தில்  1949- ஆம் ஆண்டு மே மாதம்  7- ஆம் தேதி பிறந்தார்.  இவருடைய தந்தை திரு. பாக்கிநாதன் ,  தாய் திருமதி. மரிய முத்து ஆவர்.  இவருடைய பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர்.  நல்ல கிறிஸ்தவ பக்தியில் சிறந்து விளங்கினார்கள்.  இந்த குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு  8  பிள்ளைகளைக் கொடுத்தார்.   5  ஆண் பிள்ளைகளும் , 3  பெண் பிள்ளைகளுமாக ,  தேவனுக்கு பயந்து அவருடைய நாம மகிமைக்காக வாழ்ந்து வந்தனர்.           இஸ்ரவேல் தேவதாஸ் ,  அவர்களது குடும்பத...

பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா

  பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் வேலாயுதம் என்ற தாமஸ் வேதநாயகம், 1839-ம் ஆண்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட இவர், தனது மகனுக்கு வேதநாயகம் சாமுவேல் அசரியா எனப் பெயரிட்டார். 17.08.1874 அன்று பிறந்தார் பேராயர் அசரியா, 1889-ம் ஆண்டு தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், தாயின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டவர். நல்லதோர் ஜெப வீரனாகவும், வேதத்தை நன்கு கற்றறிந்த வாலிபனாகவும் வளர்ந்து வந்த இவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இறையியல் பட்டமும் பெற்றார். பின்னர் 'கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் (YMCA) காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். அந்நாட்களில், மிஷனரியாகப் பணிசெய்துகொண்டிருந்த உவாக்கர் ஐயரது ஊழியத்தினாலும், செய்தியினாலும் தேவனுக்காக ஊழியம் செய்ய அதிகமாக ஊக்குவிக்கப்பட்டார். 1902 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்கள் தொடங்கிய மிஷனரி சங்கத்தின்மூலம் நடைபெற்றுவந்த செயல்பாடுகளினால் மிகவும் ஈர்க்கப்பட்டு, இந்தியாவிலும் மிஷனரி சங்கம் ஒன்றைத் தொடங்க முடிவு செய்தார்.  மிஷனரி மாநாடு ஒன்றில் இவர் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, ஜனங்கள் ஆர்வமு...

பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார்

    பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் (1774-1864) திருநெல்வேலி மாவட்டத்தில், ஐயம்பெருமாள் பிள்ளையின் என்பவருக்கு மகனாக 1735ம் ஆண்டு பிறந்தார் அருணாச்சலம். பக்தி முறைப்படி வளர்க்கப்பட்ட இவர், ஆறுகள், நதிகள், குளங்கள் என சுமார் ஆயிரம் இடங்களில் புனித நீராடும்படி பல யாத்திரை மேற்கொண்டபோது, நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். பணத்தை வட்டிக்குக் கொடுப்பவராக இருந்த இவர், ஏழைகளுக்கும் உதவி செய்யும் உள்ளமுடையவர். கத்தோலிக்க மத போதகர் ஒருவரைச் சந்தித்ததினால் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார்ளூ 1760ம் ஆண்டு தனது 25-வது வயதில் தேவசகாயம் என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றார். லத்தீன் மற்றும் இறையியலைக் கற்றிருந்தபோதிலும், ஆயராகவோ இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுளூ என்றபோதிலும், உபதேசியாராக ஆலயத்தில் பணிசெய்துவந்தார். இதனிமித்தம் குடும்பத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார். 1735ம் ஆண்டு தனது 35வது வயதில் சவரிராயன் செட்டியார் என்பவரது மகளும் கத்தோலிக்க விசுவாசியுமான ஞானப்பூவை வாழ்க்கைத் துணையாகத் தெரிந்துகொண்டார். இத்தம்பதியருக்கு முதல் மகனாக செப்டம்பர் 7, 1774 அன்று பிறந்தார் வேதபோதகம். பின்னர் இவரது பெய...