Skip to main content

போதகர் ஜீவானந்தம்




    தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள சாலம்பாளையம்  எனும் கிராமத்தில் கிறிஸ்துவை அறியாத ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தார். எட்டுவருட பள்ளிப் படிப்பிற்குப் பின்னர், தந்தையைப் போன்றே ஆசிரியராக விரும்பினார். விழுப்புரம் அருகில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்றில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் 1951-ம் ஆண்டு பணி நியமன ஆணை கிடைத்ததும், சென்னைக்கு இடம்யெர்ந்து ஆசிரியர் பணியினைத் தொடர்ந்தார். திராவிட முன்னேற்ற கட்சியின் மீது இருந்த அதிகமான பற்றினால், கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிர தொண்டனாகப் பணியாற்றிவந்தார். 1957-ம் ஆண்டு லேமென் சுவிசேஷ ஐக்கியத்தின் மூலமாக கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொண்டார்; இரட்சிக்கப்பட்டு புது வாழ்வினைத் தொடங்கினார். இரட்சிக்கப்பட்ட சில நாட்களிலேயே சுவிசேஷகராக கிறிஸ்துவின் நற்செய்தியினைப் பிரசங்கிக்கத் தொடங்கினார். 1960 -ம் ஆண்டு பரிசுத்த ஆவியின் நிறைவினைப் பெற்று, பகுதி நேரமாக ஊழியத்தைத் தொடர்ந்தார். 1968 -ல் தனது ஆசிரியர் பணியினை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேரமும் கர்த்தருக்கென்று ஊழியம் செய்யத் தொடங்கினார். அந்நாட்களில், ACA சபையுடன் நெருக்கமாக இருந்தவராக ஊழியம் செய்துவந்தார். 1975 -ம் ஆண்டு: C.P.D அருமைநாயகம் அவர்களின் முயற்சியில், முதன்முறையாக கடல் கடந்து சென்று, யாழ்ப்பாணம் பகுதிகளில் நற்செய்திக் கூட்டங்களில் பிரசங்கித்தார்.  

    சென்னையில் போதகர் ஜீவானந்தம் அவர்கள் நடத்திவந்த முழு இரவு ஜெபங்கள், சென்னைப் பட்டணத்தல் அநேகரை கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக எழுப்பியது. சகோ. D.G.G தினகரன் அவர்கள் இந்த முழு இரவு ஜெபங்களில் தவறாமல் கலந்துகொள்வது வழக்கம். 1983 முதல் 1990 வரை World Missionary Evangelism, Madras என்ற ஸ்தாபனத்தை நிறுவினார். 1990 -ம் ஆண்டு தேவனுடைய தரிசனத்தைப் பெற்றவராக, 'மகிழ்ச்சி' (Delight Christian Assembly) என்ற திருச்சபையினைத் தொடங்கினார். 'மகிழ்ச்சி' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ஸ்தாபகராகவும் செயல்பட்டுவந்தார். கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட போதகர் ஜீவானந்தம் மூலமாக போதகர் D. மோகன் (NLAG, Chennai) கிறிஸ்துவின் ஊழியத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். திருக்கரத்தால் தாங்கி என்னை' என்ற பாடலை இயற்றிய சகோ. J.V. பீட்டர் அவர்களை தான் செல்லும் இடமெல்லாம் அழைத்துச் சென்று மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவரை கூடவே தங்கவைத்திருந்தார். அநேக தேவமனிதர்களை உருவாக்கிய போதகர் ஜீவானந்தம் 16 அக்டோபர் 2006 அன்று பரம வீட்டில் பிரவேசித்தார்.  

Comments

Popular posts from this blog

இஸ்ரவேல் தேவதாஸ்

இஸ்ரவேல் தேவதாஸ்                தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து சுவிசேஷப் பணிக்கு வட இந்தியா புறப்பட்ட வாலிபர்கள் பலர் , 1970  முதல்  80  வரை தேவனுடைய இறுதிக் கட்டளைக்கு அடிபணிந்து நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வழியாக கலாச்சாரம் கடந்து சென்று வட இந்தியாவில் பணியாற்ற புறப்பட்ட செயல் வீரர்களில் ஒருவர் தான் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ்.  இவர் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள மணக்காடு என்ற கிராமத்தில்  1949- ஆம் ஆண்டு மே மாதம்  7- ஆம் தேதி பிறந்தார்.  இவருடைய தந்தை திரு. பாக்கிநாதன் ,  தாய் திருமதி. மரிய முத்து ஆவர்.  இவருடைய பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர்.  நல்ல கிறிஸ்தவ பக்தியில் சிறந்து விளங்கினார்கள்.  இந்த குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு  8  பிள்ளைகளைக் கொடுத்தார்.   5  ஆண் பிள்ளைகளும் , 3  பெண் பிள்ளைகளுமாக ,  தேவனுக்கு பயந்து அவருடைய நாம மகிமைக்காக வாழ்ந்து வந்தனர்.           இஸ்ரவேல் தேவதாஸ் ,  அவர்களது குடும்பத்தில்  2- வது மகன்.  இவருக்கு ஒரு அண்ணன் இருந்தார்.  அவருடைய பெயர் சாமுவேல் செல்லத்துரையாகும்.   3- வது மகன் சாலமோன் , 4- வது மகன் கிறிஸ்டோபர் தாமஸ் , 5- வது சகோதரி செல்

ஐ. ஜே. ஐயாத்துரை (1890 - 1973)

  இந்திய_மிஷனெரி_சங்கம் அனுப்பிய முன்னோடி மிஷனெரிகளில் ஒருவரே  ஐ.ஜே. ஐயாத்துரை.  ஐசக் இயேசுவடியான் ஐயாத்துரை என்ற முழுப் பெயர் கொண்ட இவர், 1890ஆம் ஆண்டு பிறந்தார். ஆசிரியராக தன் பணியைத் துவக்கிய இவர், நற்செய்திப் பணியில் வாஞ்சை கொண்டதின் காரணமாக, ஆசிரியர் பணியைத் துறந்து, பேராயர் வி.எஸ். அசரியாவோடு மிஷனெரியாக 1912ஆம் ஆண்டு, ஜட்சர்லா என்ற இடத்திற்கு மிஷனெரியாக பயணம் செய்தார். ஊழிய வாஞ்சையின் மிகுதியால் கிராமங்களிலேயே தங்கிவிடும் இவர், தங்குவதற்குக் கூட வீடு கிடைக்காத நிலையில் மொட்டை மாட்டு வண்டியின் அடியில் தங்கி, பல இன்னல்களையும். இடையூறுகளையும் கடந்து, மக்களுக்குத் தொண்டாற்றினார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இரட்சண்ய_யாத்திரிகம் என்ற ஒற்றைத்தாள் பிரதியை அச்சிட்டு தான் செல்லுமிடமெங்கும் விநியோகித்து வந்தார். மனந்திரும்பிய மைந்தன், இயேசுவின்_பிறப்பு, உயிர்த்தெழுதல், மோட்ச பிரயாணம் போன்ற நிகழ்ச்சிகளை நிழற்படம் மூலம் மக்களுக்குக் காண்பித்து, அவர்களை கிறிஸ்துவின் பாதையில் நடக்கச் செய்தார்.  "ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா"  என்ற மிகச்சிறந்த பாடலை எழுதி, அதற்கு இசையும

சகோதரர் எமில் ஜெபசிங்

    நம்மை முளையாக்கவும், இலையாக்கவும் விதையானவர்களுள் சகோ. எமில் ஜெபசிங் அவர்களது வாழ்க்கையும் அடங்கும். ஜனவரி 10, 1940 அன்று மறைதிரு லு.ஊ. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த இவர், தனது வாலிப நாட்களிலே, சகோ. P. சாம் மற்றும் சகோ. N. ஜீவானந்தம் போன்ற ஊழியர்களின் வழிநடத்துதலால், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில் தனது 17-வது வயதில் ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தார். ஏமி. கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற தேவ ஊழியர்கள் கால் தடம் பதித்த பண்ணைவிளையிலே இவருக்கும் மிஷனரி தரிசனம் பிறந்தது.  சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பணியை இராஜினாமா செய்துவிட்டு ஊழியத்திற்குப் புறப்பட்டார். நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை நிறுவியவர்களுள் ஒருவராகவும், Trans World Radio (TWR) -வின் இயக்குநராகவும் செயல்பட்டார். மே 1, 1980 -ம் ஆண்டு சகோதரர் சிலருடன் இணைந்து விஷ்வவாணி ஊழியத்தைத் தொடங்கினார்; இவ்வூழியத்தினால், சந்திக்கப்படாத கிராமங்களில் சத்தியம் ஒலித்தது, கிராமங்களில் ஆலயங்கள் உருவாகின. அநேக வாலிபர்க