சந்தியாகு
#ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலம். திருச்சபையில் பாடல்களும், ஆங்கில தொனியிலேயே முழங்கிக் கொண்டிருந்தன. தமிழ்க் கிறிஸ்தவர்களிடையே #நற்செய்தி ஆர்வத்தைப் பெருக்குவதற்கு ஆதவன் போன்று உதித்தார் #சந்தியாகு என்ற மாமனிதர்.
#கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை நூற்றுக்கு நூறாக ஆதரித்து, அவர்களின் மதத்தைத் தழுவுபவர்கள் என்ற கருத்து பரவியிருந்த காலத்தில், இயேசு அறிமுகப்படுத்திய இறையாட்சியே உலகின் அத்தனை ஆட்சிகளுக்கும் மேலானது என்பதைத் துணிவுடன் எடுத்துரைக்கவே, #சந்தியாகு_ஐயர் பிறந்தார். #இறையாட்சி என்பது சமுதாய நலன்களையும் பொறுப்புக்களையும் சுட்டிக்காட்டி அனைத்து மக்களின் நலன்களுக்கும் அடிகோலும் என்பதைத் தம் பாடல்கள் வாயிலாகப் பறைசாற்றினார்.
"தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்" என்ற பாடலையும், "இயேசுவுக்கு நமது தேசத்தை" என்ற இறையாட்சியின் பாடலையும் எழுதி மக்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தார்.
பசியற்றோர், பிணியாளிகள் நெருக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், நீசர் எனப்படுவோர், துன்பங்களுக்குள்ளும், படுகுழிகளுக்குள்ளும் விழுந்தோர், சத்திய வழிதப்பி நடப்போர், சிறந்து விளங்க வேண்டிய தாய்க்குலத்தோர், தீய பழக்கம், வீண்பக்தி, மாயக்கோட்பாடு ஆகியவைகளில் சிக்குண்டு கிடப்போர் ஆகிய பலவகைப்பட்ட மக்களையும், இயேசுவின் நற்செய்திக்கு நேராக அறைகூவி அழைத்தார்.
இந்துப் பின்னணியிலிருந்து வந்ததால், ஆண்டவருக்கென்று முழு வைராக்கியத்துடன் ஊழியம் செய்யத் தன்னை அர்ப்பணித்தவர் இவர். கணிதப் பேராசிரியராகத் தனது பணியைத் துவக்கி, பின்னர் திருச்சபைப் போதகராக முழு நேரப் பணியில் தம்மை ஈடுபடுத்தி, திருச்சபை ஒருமைப்பாட்டிற்காகப் பாடுபட்டவர். இவரின் உயிர்மீட்சிப் பாடலால் ஆயிரக்கணக்கானோர் உள்ளொளி பெற்று, நல்வழி நடந்து கிறிஸ்துவின் தொண்டராய் வாழ்ந்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக